ADDED : ஜூன் 25, 2025 01:05 AM

புதுச்சேரி : முதியவர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டக்குப்பம் அடுத்த சின்ன முதலியார்சாவடியை சேர்ந்தவர் ஆறுமுகம், 65. இவர் கடந்த 17ம் தேதி, வீட்டில் இருந்து கிளம்பி, புதுச்சேரி அரசு மருத்துவமனை அருகில் உள்ள சிமோனல் வீதியில் நின்றிருந்தார். அதன் பின், அவர் வீட்டுக்கும் வராமல் எங்கு சென்றார் என தெரியவில்லை.
இதுகுறித்து, புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.