ADDED : மே 24, 2025 03:26 AM

புதுச்சேரி: முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.
முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா துவங்கி நடந்து வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக ஊஞ்சல் உற்சவம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு அபி ேஷக ஆராதனை நடந்தது.
நேற்று மாலை கும்ப படையல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6:30 மணிக்கு திரவுபதியம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.