ADDED : மே 24, 2025 03:25 AM
அரியாங்குப்பம்,: தவளக்குப்பம் அடுத்த புதுகுப்பம் ஓட்டலில் தங்கிய சுற்றுலா பயணியின் நகை காணாமல் போனது. அதன்பேரில் போலீசார் ஓட்டலில் வேலை பார்த்த பெண் ஊழியர்கள் உட்பட ஐந்து பேரை தவளக்குப்பம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
அப்போது பெண் ஊழியருடன் வந்த அவரது கணவர் போலீஸ் நிலையத்தில் மயங்கி விழுந்தார். அவரை போலீசார் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.