Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தெற்காசிய அமைதி முகாம்

தெற்காசிய அமைதி முகாம்

தெற்காசிய அமைதி முகாம்

தெற்காசிய அமைதி முகாம்

ADDED : மே 21, 2025 06:53 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி,: கேரளா வடகராவில் கேரளா வடகரா உத்சவம் பெயரில், தெற்காசிய அளவிலான அமைதி முகாம் ஓர்க்காட்டேரியில் நடந்தது.

இந்த முகாமில் இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், இந்தோனேஷியா, ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்திய பிரதிநிதியாக மத்திய அரசின் தேசிய விருது பெற்ற சமூக சேவகரும், தெற்காசிய கூட்டமைப்பின், புதுச்சேரி ஒருங்கிணைப்பாளருமான ஆதவன், புதுச்சேரி மகளிர் பிரதிநிதியாக ஜெயப்பிரதா, ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக அவரவர் கலாச்சார உடைகளில், கலை ஞர்களின் ஊர்வலத்தை, ஷபி பரம்பில் எம்.பி., ரமா எம்.எல்.ஏ., வடகரா முன்னாள் எம்.எல்.ஏ., பராக்கல் அப்துல்லா, வரவேற்பு குழுத் தலைவர் வடகரா ராதாகிருஷ்ணன், ஆகியோர் பங்கேற்றனர்.

அகில இந்திய தலைவர் தீபக் மால்வியா, செயலர் ரபி மொகந்தி, துணைத் தலைவர் சித்ரா சுகுமாறன், ஜெகதீஷ், காங்., பிரபாகரன், மா.கம்யூ., செயலாளர் வேணு உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us