/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு புதுச்சேரி நபர் ரூ.92 லட்சம் இழப்பு போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு புதுச்சேரி நபர் ரூ.92 லட்சம் இழப்பு
போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு புதுச்சேரி நபர் ரூ.92 லட்சம் இழப்பு
போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு புதுச்சேரி நபர் ரூ.92 லட்சம் இழப்பு
போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு புதுச்சேரி நபர் ரூ.92 லட்சம் இழப்பு
ADDED : செப் 16, 2025 12:11 AM
புதுச்சேரி : போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து, ரெட்டியார் பாளையத்தை சேர்ந்தவர் ரூ. 92 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.
புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர், ஆன்லைன் டிரேடிங் செய்ய விரும்பி சமூக வலைதளத்தில் தேடியுள்ளார். அப்போது, அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் டிரேடிங்கில் முதலீடு செய்து எப்படி திறமையாக சம்பாதிக்கலாம், அதிக லாபத்தை தரும் டிரேடிங் நிறுவனங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்து கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.அதை நம்பிய, மர்ம நபர் தெரிவித்த வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்துள்ளார். பிறகு, அந்த குழுவில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பல்வேறுதகவல்கள் குறித்து தினசரி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆன்லைன் டிரேடிங் தொடர்பான அனைத்து தகவல்களும் தெரிவித்து விட்டதாக நினைத்த அவர், மர்ம நபர் அனுப்பிய ஆன்லைன் டிரேடிங் லிங்கில் பல்வேறு தவணைகளாக 92 லட்சத்து 88 ஆயிரத்து 336 ரூபாய் முதலீடு செய்துள்ளார்.அதன்மூலம் அவருக்கு வந்த லாபப் பணத்தை எடுக்க முயன்றபோது, வருமான வரி, ஜி.எஸ்.டி., கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதன்பிறகே, மோசடி கும்பலிடம் முதலீடு செய்து பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், பிருந்தாவனத்தை சேர்ந்தவர் 67 ஆயிரத்து 392 ரூபாய் இழந்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.