Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேலுார் நபர் மர்ம சாவு போலீசார் விசாரணை

வேலுார் நபர் மர்ம சாவு போலீசார் விசாரணை

வேலுார் நபர் மர்ம சாவு போலீசார் விசாரணை

வேலுார் நபர் மர்ம சாவு போலீசார் விசாரணை

ADDED : செப் 20, 2025 11:46 PM


Google News
அரியாங்குப்பம் : வீராம்பட்டினத்தில் தங்கியிருந்த வேலுரை சேர்ந்தவர், மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேலுாரை அடுத்த கீழ்ப்பட்டி கிராமம் சாந்தி நகரை சேர்ந்தவர் பிரவின், 34. இவர், கடந்த3 மாதங்களுக்கு முன், புதுச்சேரிக்கு வந்துள்ளார்.

வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேர் திருவிழாவை, பார்க்க வந்தவர். அதே பகுதியில் உள்ள மக்கள் குழு பஞ்சாயத்து அலுவலகத்தில், பராமரிப்பு வேலை செய்து வந்தார்.

மக்கள் குழு அலுவலக நிர்வாகிகள், அலுவலகத்தின் சாவியை கொடுத்து, அவரை அங்கு தங்கு வதற்கு அனுமத்தித்தனர். மக்கள் குழு நிர்வாகி, நேற்று காலை 9:00 மணிக்கு அலுவலகத்திற்கு சென்றார்.

அங்கு தங்கியிருந்த பிரவினை காணவில்லை. உள்ளே சென்று பார்க்கும் போது, கழிவறையில், மர்மான முறையில், பிரவின் துாக்கில் இறந்த நிலையில், தொங்கினார்.

தகவலறிந்த அரியாங்குப்பம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவருக்கு ஷோபனா என்ற மனைவியும், 7 மற்றும் 5ம் வகுப்பு படிக்கும் இரு மகன்கள் உள்ளனர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us