Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிலாளி மர்ம சாவு போலீசார் விசாரணை

தொழிலாளி மர்ம சாவு போலீசார் விசாரணை

தொழிலாளி மர்ம சாவு போலீசார் விசாரணை

தொழிலாளி மர்ம சாவு போலீசார் விசாரணை

ADDED : ஜூன் 30, 2025 02:59 AM


Google News
பாகூர் : கூலி தொழிலாளி வயலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாகூர் அடுத்த நிர்ணயப்பட்டு பேட்டை சேர்ந்தவர் அதிஷ்குமார்,40; கூலி தொழிலாளி. இவருக்கு சந்தியா என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். அதிஷ்குமாருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால், அவரால் சரிவர வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று காலை இயற்கை உபாதைக்காக வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

அவரது குடும்பத்தினர், பல இடங்களில் தேடினர். இந்நிலையில், அங்குள்ள வயல்வெளியில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த பாகூர் போலீசார், அதிஷ்குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அவரது மனைவி சந்தியா அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து, அதிஷ்குமார் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us