ADDED : மே 14, 2025 11:31 PM

புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் யார் என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி சுப்பையா சாலை தனியார் பெட்ரோல் பங்கு அருகில், 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என, தெரியவில்லை. இதுகுறித்து, ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.