ADDED : மே 14, 2025 11:31 PM
வில்லியனுார்: வில்லியனுாரில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வில்லியனுார் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சேஷந்திரன், 66; டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு சேஷந்திரன் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டைபோட்டுள்ளார்.
பின், படுக்கை அறைக்கு சென்று துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி மங்கலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.