ADDED : ஜூன் 14, 2025 07:00 AM

புதுச்சேரி : சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் யார் என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலுார் சாலை, கோர்ட் எதிரே 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் கடந்த 11ம் தேதி இறந்து கிடந்தார். அவர், யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.