ADDED : ஜூன் 28, 2025 06:54 AM
அரியாங்குப்பம் : குடும்ப பிரச்னையில், விரக்தியடைந்த முதியவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியாங்குப்பம், அருந்ததிபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம், 69. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்தது. அதனால் பரமசிவம் கோபித்து கொண்டு, அதே பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
சில நாட்களாக விரக்தியில் இருந்த அவர், நேற்று முன்தினம், வீட்டில், துாக்குப்போட்டு தற்கொலை கொண்டார். புகாரின்பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.