Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 2 குழந்தைகளுடன் தாய் மாயம்

2 குழந்தைகளுடன் தாய் மாயம்

2 குழந்தைகளுடன் தாய் மாயம்

2 குழந்தைகளுடன் தாய் மாயம்

ADDED : செப் 07, 2025 07:25 AM


Google News
நெட்டப்பாக்கம் : இரண்டு குழந்தைகளுடன் தாய் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெட்டப்பாக்கம் அடுத்த கல்மண்டபம் புதுநகரை சேர்ந்தவர் அருள்மணி, 36; கொத்தனார். இவர், பண்டசோழநல்லுார், சூரியன்பேட் பகுதியை சேர்ந்த ஆர்த்தி, 24, என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜனனி, ஷர்மிதா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

அருள்மணி, நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கொத்தனார் வேலைக்கு சென்றார். வேலை முடிந்து மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் காணவில்லை.

உறவினர்கள், தோழிகளிடம் விசாரித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அருள்மணி கொடுத்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம்போலீசார் வழக்குப் பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us