Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மருத்துவ மாணவர் கடலில் தற்கொலை

மருத்துவ மாணவர் கடலில் தற்கொலை

மருத்துவ மாணவர் கடலில் தற்கொலை

மருத்துவ மாணவர் கடலில் தற்கொலை

ADDED : ஜன 31, 2024 01:17 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி:புதுச்சேரியில்எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி கடற்கரை அம்பேத்கர் மணிமண்டபம் எதிரே நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு, வாலிபர் உடல் கரை ஒதுங்கியது. தகவலறிந்த பெரியகடை போலீசார் சென்று, வாலிபர் உடலை மீட்டு விசாரித்தனர்.

கடலுார் மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை காமராஜர் நகரைச் சேர்ந்த கவுதமன் மகன் நிதிஷ், 23; என்பதும், பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு படித்த நிதிஷ் என்பது தெரிந்தது. பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு நேற்று முன் தினம், தேர்வு நடந்தது. அதற்காக வழக்கம்போல் காலை 7:45 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். அவரது கல்லுாரி பை, அம்பேத்கர் மணிமண்டபம் அருகே உள்ள உணவகத்தில் கிடந்தது.

தேர்வு பயத்தில் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us