Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வியாபாரிக்கு கத்தி குத்து

வியாபாரிக்கு கத்தி குத்து

வியாபாரிக்கு கத்தி குத்து

வியாபாரிக்கு கத்தி குத்து

ADDED : மே 18, 2025 02:41 AM


Google News
அரியாங்குப்பம்: மாமூல் தராத ஆத்திரத்தில், வியாபாரியை கத்தியால் குத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இடையார்பாளையம் என்.ஆர்., நகரை சேர்ந்தவர் ஆனந்த், 39. இவர், சாலையோரத்தில் தர்பூசணி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நாகராஜ் என்பவர் வேலை செய்து நின்று விட்டார்.

அடிக்கடி நாகராஜ் கடைக்கு வந்து, ஆனந்திடம் மாமூல் கேட்டார். மாமூல் தராததால் ஆத்திரத்தில், அவர், கத்தியால் நாகராஜ் உடலில் குத்தினார்.

பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, நாகராஜை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us