Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலீஸ் மக்கள் மன்றத்தில் 33 புகார்களுக்கு உடனடி தீர்வு

போலீஸ் மக்கள் மன்றத்தில் 33 புகார்களுக்கு உடனடி தீர்வு

போலீஸ் மக்கள் மன்றத்தில் 33 புகார்களுக்கு உடனடி தீர்வு

போலீஸ் மக்கள் மன்றத்தில் 33 புகார்களுக்கு உடனடி தீர்வு

ADDED : ஜூன் 22, 2025 02:24 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

அதன்படி, முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக அதனை நிவர்த்தி செய்யும் நடவடிக்கை மேற்கொண்டார்.

இதேபோல், முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் கிழக்கு எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன், மேட்டுப்பாளையத்தில் வடக்கு எஸ்.பி., வீரவல்லவன், போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., செல்வம், ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தனர்.

இதில், பொது மக்களிடம் இருந்து 91 புகார்கள் பெறப்பட்டு, 33 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மக்கள் மன்றத்தில் மொத்தமாக 64 பெண்கள் உட்பட 283 பேர் பங்கேற்று புகார்களை அளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us