ADDED : ஜூன் 12, 2025 11:14 PM

அரியாங்குப்பம்: மருத்துவமனைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.
அரியாங்குப்பம் காக்கையாந்தோப்பை சேர்ந்தவர் முகமது சலீம், 57, இவர் வலிப்பு நோய் பிரச்னையால் வீட்டில் இருந்துவந்தார். கடந்த 2ம் தேதி மருத்துவமனைக்கு செல்வதாக, கூறி விட்டு சென்றார். மாலை வரை வீட்டுக்கு வரததால் சந்தேகமடைந்து அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது மனைவி, மெகராஜ்பேகம் கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.