Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மது விற்பனைக்கு தடை ஆணையர் உத்தரவு

மது விற்பனைக்கு தடை ஆணையர் உத்தரவு

மது விற்பனைக்கு தடை ஆணையர் உத்தரவு

மது விற்பனைக்கு தடை ஆணையர் உத்தரவு

ADDED : ஜன 25, 2024 04:10 AM


Google News
பாகூர: வள்ளலார் ஜோதி தினத்தையொட்டி, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து பகுதியில்இன்று அனைத்து வகை மது கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இன்று (25ம் தேதி) வள்ளலார் ஜோதி தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி கலால் துறை அறிவுறுத்தலின்படி பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உட்பட்ட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.

அன்றைய தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனைக்கு தடை செய்யப்படுகிறது. மீறுபவர்கள் மீது கொம்யூன் பஞ்சாயத்து சட்ட விதிகளின்படிநடவடிக்கை எடுக்கப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us