Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காரை அடமானம் வைத்து மோசடி: 3 பேர் மீது வழக்கு

காரை அடமானம் வைத்து மோசடி: 3 பேர் மீது வழக்கு

காரை அடமானம் வைத்து மோசடி: 3 பேர் மீது வழக்கு

காரை அடமானம் வைத்து மோசடி: 3 பேர் மீது வழக்கு

ADDED : மே 23, 2025 11:56 PM


Google News
புதுச்சேரி: புதுச்சேரி, சண்முகாபுரம், பாரதி தெருவை சேர்ந்தவர் சரண்ராஜ், 32. இவரது நண்பர்கள் சிவக்குமார், ஏழுமலை மற்றும் சாய் என்ற தில்லைகணேஷ். மூவரும் குடும்பத்துடன் வெளியூர் செல்ல, சரண்ராஜ் என்பவரின் பி.ஓய்.01 சி.எச் 6444 பதிவெண் கொண்ட சிப்ட் டிசையர் காரை கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி வாங்கி சென்றனர்.

ஆனால், அவர்கள் இதுவரை காரை சரண்ராஜிடம் ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து சரண்ராஜ் கேட்டபோது, பல்வேறு காரணங்களை கூறி காலம் கடத்தி னர். இந்நிலையில், சரண்ராஜிடம் இருந்து வாங்கி சென்ற காரை, மூவரும் இணைந்து அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதேபோல், மூவரும் ஏற்கனவே இருவரின் கார்களை வாங்கி சென்று அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

சரண்ராஜ் அளித்த புகாரின் பேரில் சிவக்குமார், ஏழுமலை, சாய் ஆகியோர் மீது மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us