/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இ.சி.ஆர் பஸ் ஸ்டாண்டிற்கு பிறந்தது... விடிவு காலம்; உழவர்கரை நகராட்சி மூலம் கட்ட முடிவுஇ.சி.ஆர் பஸ் ஸ்டாண்டிற்கு பிறந்தது... விடிவு காலம்; உழவர்கரை நகராட்சி மூலம் கட்ட முடிவு
இ.சி.ஆர் பஸ் ஸ்டாண்டிற்கு பிறந்தது... விடிவு காலம்; உழவர்கரை நகராட்சி மூலம் கட்ட முடிவு
இ.சி.ஆர் பஸ் ஸ்டாண்டிற்கு பிறந்தது... விடிவு காலம்; உழவர்கரை நகராட்சி மூலம் கட்ட முடிவு
இ.சி.ஆர் பஸ் ஸ்டாண்டிற்கு பிறந்தது... விடிவு காலம்; உழவர்கரை நகராட்சி மூலம் கட்ட முடிவு
என்ன காரணம்
புதுச்சேரி நகராட்சியின் 23 வார்டுகள் உள்ளடங்கிய ஏரியாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரப்பட்டது.ஆனால் இ.சி.ஆர் பஸ் ஸ்டாண்ட்டிற்கான இடம், இந்த ஸ்மார்ட் சிட்டி ஏரியாவை தாண்டி உள்ளதால் நவீன பஸ் ஸ்டாண்ட் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
முதல்வர் தீவிரம்
இதற்கிடையில், இ.சி.ஆர்., பஸ் ஸ்டாண்ட் திட்டத்தில் இருந்து ஸ்மார்ட் சிட்டி விலகி கொண்ட சூழ்நிலையில்,புதுச்சேரி அரசே உழவர்கரை நகராட்சி மூலமாக கட்ட முடிவு செய்துள்ளது.இந்த திட்டத்திற்கு நிதி கேட்டு,உழவர்கரை நகராட்சி தற்போது கோப்பு அனுப்பியுள்ளது.
இப்படி யோசித்து இருக்கலாம்
ஸ்மார்ட் சிட்டி எல்லைக்குள் வசிக்கும் மக்களுக்காக வேறு ஒரு பகுதியில் போர்வெல் அல்லது மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கலாம் என்று விதிமுறை சொல்லுகின்றது. அப்படி பார்க்கும்போது ஸ்மார்ட் சிட்டி ஏரியாவில் வசிக்கும் மக்களுக்காக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இ.சி.ஆரில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படுகிறது என்று விதிமுறைகளை சுட்டி காட்டி,புதுச்சேரி அரசு மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தால்,இப்பிரச்னையை முடிவு எட்டப்பட்டு இருக்கும்.15 கோடி நிதியும் மிச்சமாகி இருக்கும். ஆனால்,புதுச்சேரி அரசு தவறியதால் இப்போது நிதி சுமையை புதுச்சேரி அரசே ஏற்க வேண்டிய நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.