Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சீமை கருவேலம் குறித்த புத்தகம் வெளியீடு

சீமை கருவேலம் குறித்த புத்தகம் வெளியீடு

சீமை கருவேலம் குறித்த புத்தகம் வெளியீடு

சீமை கருவேலம் குறித்த புத்தகம் வெளியீடு

ADDED : மே 28, 2025 07:13 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ் பாபு சீமை கருவேலம் குறித்து புத்தகம் வெளியிட்டார்.

உள்நாட்டில் சீமை கருவேலம் என்று அழைக்கப்படும் ப்ரோசோபிஸ், உலகின் மிக ஆதிக்கம் செலுத்தும் மற்றும் தீங்கு விளைவிக்கும் களைகளாக உருவெடுத்துள்ளது. ப்ரோசோபிஸ் அச்சுறுத்தலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் உள்ளது. ப்ரோசோபிஸ் பல மாநிலங்களில் பரவி, கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

புதுச்சேரி, தமிழ்நாடு பகுதிகளில் சீமை கருவேலம் வளர்ந்து வருகிறது. முக்கிய ஆக்கிரமிப்பு இனங்களின் மற்ற பண்புகளில், இது எதிர்மறை அலெலோபதியையும் கொண்டுள்ளது.

சீமை கருவேலம் மற்ற வகை தாவரங்களை அதன் அருகில் இருந்து விரட்டி, அந்த இடத்தை ஆக்கிரமிக்கிறது. இதையடுத்து புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் அப்பாஸி மற்றும் அவரது குழுவினர் பொருளாதார ரீதியாக சாத்தியமான வழிகள் மற்றும் சீமை கருவேலத்தை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த குழு அதன் சொந்த ஆராயச்சியின் கண்டுபிடிப்புகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளையும் தொகுத்து புத்தகம் வெளிட்டுள்ளது. இந்த புத்தகத்தை பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ் பாபு வெளியிட்டார்.

இந்த புத்தகம் சீமை கருவேல மரங்களை கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும் உலகளாவிய முயற்சிகளைத் துாண்டும் மற்றும் ஊக்கமளிக்கும் என்று வாழ்த்தினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us