/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கடலில் மூழ்கடித்து மனைவி கொலை கடலுார் அருகே கொடூர கணவன் கைதுகடலில் மூழ்கடித்து மனைவி கொலை கடலுார் அருகே கொடூர கணவன் கைது
கடலில் மூழ்கடித்து மனைவி கொலை கடலுார் அருகே கொடூர கணவன் கைது
கடலில் மூழ்கடித்து மனைவி கொலை கடலுார் அருகே கொடூர கணவன் கைது
கடலில் மூழ்கடித்து மனைவி கொலை கடலுார் அருகே கொடூர கணவன் கைது
UPDATED : ஜன 08, 2024 07:14 AM
ADDED : ஜன 08, 2024 05:05 AM
புதுச்சத்திரம்: கடலுார் அருகே கடலில் குளித்தபோது, மனைவியை கடலில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், கடலுார் அடுத்த பச்சையாங்குப்பம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராமநாதன், 35; கூலித்தொழிலாளி.
இவரது மனைவி கார்த்திகா, 33; கடந்த ஆண்டு மே மாதம் 15ம் தேதி, சாமியார்பேட்டை கடற்கரைக்கு சென்ற இருவரும், அங்கு கடலில் குளித்துள்ளனர்.
அப்போது, கார்த்திகா ராட்சத அலையில் சிக்கி மூழ்கி இறந்ததாக ராமநாதன் புதுச்சத்திரம் போலீசில் புகார் அளித்தார்.
இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து, பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துமனைக்கு, கார்த்திகா உடலை அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், கார்த்திகாவை நீரில் மூழ்கடித்து கொலை செய்தது தெரியவந்தது
அதைத்தொடர்ந்து புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வினதா மற்றும் போலீசார் ராமநாதனை பிடித்து விசாரித்தனர்.
அதில், 'கார்த்திகா வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக சந்தேகம் இருந்தது. கடன் வாங்கி வீண் செலவுகள் செய்து வந்தார். கடன்காரர்கள் வீட்டிற்கு வந்து பணம் கேட்டு வந்தனர். இதனால், ஆத்திரத்தில் கடலில் குளிக்கும் போது கார்த்திகாவின் கழுத்தில் காலை வைத்து அழுத்தி கொலை செய்தேன்' என தெரிவித்தார்.
அதையடுத்து, சம்பவம் நடந்து 7 மாதங்களுக்கு பிறகு, புதுச்சத்திரம் போலீசார் சந்தேக மரணம் பிரிவில் பதிந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, ராமநாதனை கைது செய்தனர்.
கடலுார் அருகே கணவனே மனைவியை தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்து, கடலில் மூழ்கி இறந்ததாக நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.