Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அனுமதியின்றி பேனர் போலீசார் வழக்குப் பதிவு

அனுமதியின்றி பேனர் போலீசார் வழக்குப் பதிவு

அனுமதியின்றி பேனர் போலீசார் வழக்குப் பதிவு

அனுமதியின்றி பேனர் போலீசார் வழக்குப் பதிவு

ADDED : ஜூன் 18, 2025 04:51 AM


Google News
புதுச்சேரி: ரெட்டியார்பாளையத்தில் அனுமதியின்றி பேனர் வைத்த மர்ம நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர், கட் அவுட் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டு, சாலைகளில் அனுமதி இல்லாமல் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், போக்குவரத்து இடையூராக பேனர்கள், கட் அவுட் வைப்பது குறைந்ததாக தெரியவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் ரெட்டியார்பாளையம், இந்திரா சதுக்கம்- அரும்பார்த்தபுரம் சாலை வரையில் போக்குவரத்திற்கு இடையூராகவும், நடைப்பாதையை ஆக்கிரமித்தும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

இதுகுறித்து, புதுச்சேரி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஜெயராஜ் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்த மர்ம நபர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us