ADDED : மே 27, 2025 07:27 AM

புதுச்சேரி: உழைப்பாளர் நாள் விழா மற்றும் கோடை கால, இலக்கிய விழாவில், விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில், நேற்று நடந்த விழாவில், தமிழ்ச்சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்தாஸ் வரவேற்றார். துணைத் தலைவர் ஆதிகேசன், திருநாவுக்கரவு, பொருளாளர் அருள்செல்வம், துணை செயலாளர் தினகரன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்து கொண்டு, முருகன், கோதண்டபாணி, டாக்டர் கலைவேந்தன், வழக்கறிஞர் சோழநாஜன், ஆசிரியை கலைவாணி ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, உரையரங்கம் மற்றும் நாட்டிய நாடகம் நிகழ்ச்சி நடந்தது.
ராஜா நன்றி கூறினார்.