ADDED : பிப் 25, 2024 04:15 AM
புதுச்சேரி : மாசிமக பெருவிழாவையொட்டி, பிராமணர் நலசங்கம் சார்பில், 23வது ஆண்டாக அன்னதானம் வழங்கப்பட்டது.
மாசிமக பெருவிழா வைத்திக்குப்பம் - குருசுக்குப்பம் கடற்கரையில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு புதுச்சேரி பிராமணர் நலசங்கம் சார்பில், 23வது ஆண்டாக அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சர்மா, சுரேஷ், ஸ்ரீதர், கேதாரீஸ்வரன், ராஜா சாஸ்திரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.