/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கணவனை கத்தியால் குத்திய மனைவி மீது வழக்குப் பதிவுகணவனை கத்தியால் குத்திய மனைவி மீது வழக்குப் பதிவு
கணவனை கத்தியால் குத்திய மனைவி மீது வழக்குப் பதிவு
கணவனை கத்தியால் குத்திய மனைவி மீது வழக்குப் பதிவு
கணவனை கத்தியால் குத்திய மனைவி மீது வழக்குப் பதிவு
ADDED : ஜன 11, 2024 11:54 PM
அரியாங்குப்பம்: குடும்ப தகராறில் கணவனை கத்தியால் குத்திய மனைவி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவநாதன், 47; இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி சிவசாந்த பார்வதி, 42; கணவன், மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்த வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அவரது மனைவி வீட்டில் வைத்திருந்து கத்தியால் கணவன் கழுத்தில் குத்தினார். இதில் காயமடைந்த அவர், தனது நண்பரை மொபைல் போன் மூலம் அழைத்து , தவளக்குப்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, அவரது மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.