Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 7 பேரிடம் ரூ.3.62 லட்சம் மோசடி

7 பேரிடம் ரூ.3.62 லட்சம் மோசடி

7 பேரிடம் ரூ.3.62 லட்சம் மோசடி

7 பேரிடம் ரூ.3.62 லட்சம் மோசடி

ADDED : செப் 13, 2025 09:15 AM


Google News
புதுச்சேரி : வில்லியனுாரைச் சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்மநபர், வங்கி அதிகாரி போல் பேசினார்.

அதில், வங்கி கணக்கின் கே.ஓய்.சி.,யை புதுப்பிக்க ஏ.டி.எம்.கார்டு விவரங்களை கேட்டுள்ளார்.

இதைநம்பிய அவர், மர்ம நபருக்கு அனைத்து விவரங்களையும் தெரிவித்தார். அதன்பின் அவரது வங்கியில் இருந்து 97 ஆயிரம் ஆயிரம் ரூபாயை மோசடி கும்பல் எடுத்து ஏமாற்றியுள்ளது.

இதேபோல், கோரிமேட்டை சேர்ந்த பெண், பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து, ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 165 ரூபாய் ஏமாந்தார்.

வம்புப்பட்டை சேர்ந்தவர் 57 ஆயிரத்து 100, அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் 35 ஆயிரம், வில்லியனுாரைச் சேர்ந்தவர் 38 ஆயிரம், முதலியார்பேட்டையை சேர்ந்த நபரிடம் 19 ஆயிரத்து 600, மற்றும் பெண் நபரிடம் இருந்து 11 ஆயிரத்து 418 என, 7 பேர் 3 லட்சத்து 62 ஆயிரம் 283 ரூபாய் இழந்துள்ளனர்.

புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us