ADDED : ஜூன் 24, 2024 05:28 AM
அரியாங்குப்பம், : தவளக்குப்பத்தில் கத்தியுடன் நின்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தவளக்குப்பம் நல்லவாடு மெயின் ரோட்டில் நேற்று கத்தியுடன் வாலிபர் பொதுமக்களை மிரட்டுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, அங்கு சென்ற போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகம், 25; என தெரியவந்தது.
அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.