Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு

ADDED : ஜூலை 21, 2024 05:42 AM


Google News
திருக்கனுார்: திருக்கனுார், தேவநாதன் நகர், 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கவுதமன், 49; கூலி தொழிலாளி. இவரது மனைவி புனிதவதி. தம்பதிக்கு நான்கு மகன்கள் உள்ளனர்.

குடிப்பழக்கம் உடைய கவுதமன் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு, வீட்டிற்கு வராமல் வெளியே சுற்றித் திரிந்தார். கடந்த 18ம் தேதி திருக்கனுார் டி.வி.மலை ரோட்டில் அதிக குடிபோதையில் வலிப்பு வந்து கவுதமன் இறந்து கிடப்பதாக திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவுதமன் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து அவரது மனைவி புனிதவதி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us