ADDED : ஜூலை 31, 2024 04:12 AM
புதுச்சேரி : பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.
ரெட்டியார்பாளையம் லேம்பர்ட் சரவணா நகரை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவரது மகள் ஜான்சிராணி, 19; இவர் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ஜான்சிராணியின் சகோதரர் வின்செட் பவுல், இவரை பக்கத்து விட்டை சேர்ந்தவர் தமிழரசன்,22; தாக்கியுள்ளார். அதனை, ஜான்சிராணி தட்டி கேட்டார். அதில், ஆத்திரமடைந்த, தமிழரசன் அவரது தாய் ஆகியோர் சேர்ந்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து தமிழரசனை தேடிவருகின்றனர்.