ADDED : ஜூலை 08, 2024 04:03 AM
புதுச்சேரி: கன்னியக்கோவிலில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பாகூர் அடுத்த கன்னியக்கோவில் பாலம் அருகில் 2 வாலிபர்கள் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாகூர் போலீசார் அங்கு சென்றனர். அப்போது, போலீசாரை பார்த்து தப்பியோட முயன்ற 2 வாலிபர்கள் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் பிள்ளையார்குப்பம் ராஜேஷ், 19, ஈச்சங்காடு சுரேந்தர், 23, என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. அதையடுத்து, இருவர் மீதும் பாகூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.