ADDED : ஜூன் 26, 2024 02:33 AM

புதுச்சேரி, : புதுச்சேரி மிஷன் வீதி புனித அந்தோணியர் ஆலயத்தில் நேற்று தேர் பவனி நடந்தது.
புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள புனித அந்தோணியர் ஆலயத்தில் புனித அந்தோணியர் பெருவிழா கடந்த 13ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. தினமும் மாலை சிறப்பு திருப்பலி நடந்தது. நேற்று மாலை 6:30 மணிக்கு தேர்பவனி நடந்தது.
ஏராளமானோர் கலந்து கொண்டு வழிப்பட்டனர். ஏற்பாடுகளை புனித அந்தோணியர் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.