/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விஷ வாயு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் விஷ வாயு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம்
விஷ வாயு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம்
விஷ வாயு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம்
விஷ வாயு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம்

மக்கள் குற்றச்சாட்டு
வீடுகளில் வசிக்கும் மக்கள் கழிவறைக்கு கூட செல்ல முடியாத நிலையில் இருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.இதுதொடர்பாக, கலெக்டர் குலோத்துங்கன் மற்றும் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் ஆகியோர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
6 பேர் மருத்துவனையில் அனுமதி
இந்நிலையில், புதுநகர் 3வது தெருவை சேர்ந்த புஷ்பராணி, 38, என்பவர் நேற்று காலை திடீரென மயங்கி விழுந்தார். அதுமட்டுமின்றி அப்பகுதியை சேர்ந்த, 5 பேர் திடீரென மயக்கமடைந்ததால், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள்விஷ வாயு கசிவால், பாதிக்கப்பட்டனரா அல்லது வேறு காரணமா என, பரிசோதனை நடந்து வருகிறது.
பணிகள் தீவிரம்
அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகள், மாலைக்குள் அனைத்து வீடுகளிலும் உள்ள, கழிவுநீர் குழாய்கள் சரி செய்யப்படும் என, உறுதி அளித்தனர். இதையடுத்து சீரமைக்கும் பணிகள் துவங்கியது. முதற்கட்டமாக, 3வது மற்றும் 4வது தெருக்கள் மற்றும் கனகன் ஏரி அருகே விஷ வாயு செல்வதற்கு வசதியாக 'பைப்' அமைக்கும் பணி நடந்தது.
சமுதாய நலக்கூடத்தில் தஞ்சம்
விஷ வாயு தாக்கி இறந்து விடுவோமோ என்ற அச்சத்தால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சமுதாய நலக்கூடத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
6 பேர் உடல்நிலை கண்காணிப்பு
தற்போது கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, 6 பேரின் உடல்நிலையை டாக்டர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இவர்கள் அனைவருக்கும், ரத்த அழுத்தம் அதிகரித்து காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.