/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவி பிரிந்த சோகத்தில் அதிகம் குடித்த கணவர் சாவு மனைவி பிரிந்த சோகத்தில் அதிகம் குடித்த கணவர் சாவு
மனைவி பிரிந்த சோகத்தில் அதிகம் குடித்த கணவர் சாவு
மனைவி பிரிந்த சோகத்தில் அதிகம் குடித்த கணவர் சாவு
மனைவி பிரிந்த சோகத்தில் அதிகம் குடித்த கணவர் சாவு
ADDED : ஜூலை 28, 2024 06:36 AM
புதுச்சேரி, : மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் அதிகமாக குடித்த கணவர் இறந்தார்.
ரெட்டியார்பாளையம், புதுநகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 42; வாட்ச்மேன். இவரது மனைவி முனிபாரதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், கருத்து வேறுபாடு காரணமாக மணிகண்டனை விட்டு முனிபாரதி பிரிந்து சென்றார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் தினமும் குடித்து வந்தார். நேற்று காலை அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு, வீட்டில் மயங்கி விழுந்து இறந்தார்.
புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.