Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜிப்மர் செக்யூரிட்டியை தாக்கிய வாலிபர் கைது

ஜிப்மர் செக்யூரிட்டியை தாக்கிய வாலிபர் கைது

ஜிப்மர் செக்யூரிட்டியை தாக்கிய வாலிபர் கைது

ஜிப்மர் செக்யூரிட்டியை தாக்கிய வாலிபர் கைது

ADDED : ஜூன் 01, 2024 05:42 AM


Google News
புதுச்சேரி, : ஜிப்மர் செக்யூரிட்டியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் வினித், 28; ஜிப்மரில் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார்.

புதுச்சேரியை சேர்ந்தவர் குமரகுருபரன், 32. இவரது தாய், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை பார்க்க குமரகுருபரன் சென்றபோது, இந்நேரத்தில் செல்ல முடியாது என வினித் கூறினார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த, குமரகுருபரன், வினித்தை தாக்கினார்.

புகாரின் பேரில், டி.நகர்., போலீசார் வழக்குப் பதிந்து, குமரகுருபரனை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us