ADDED : ஜூலை 28, 2024 06:29 AM

புதுச்சேரி : ஏழை மாரியம்மன் கோவிலில் நடந்த, ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி, காராமணிக்குப்பம், நல்லாண்டு மேஸ்திரி வீதியில் ஏழை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த, 18ம் தேதி, ஏழை மாரியம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.
கடந்த 26ம் தேதி அம்மனுக்கு அபிேஷகம், செடல் உற்சவம் மற்றும் பாற்சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இன்று மாலை மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.