ADDED : ஜூன் 15, 2024 05:32 AM

புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரசு தொடக்க பள்ளியில், மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகம் வழங்கும் விழா நடந்தது.
பள்ளி ஆசிரியர் நிர்மலா தேவி வரவேற்றார். தலைமை ஆசிரியர் இளங் கோவன் முன்னிலை வகித்தார். கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகங்களை வழங்கினார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் சேவை மன்ற தலைவர் சசிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.