ADDED : ஜூலை 08, 2024 04:17 AM

புதுச்சேரி: கலை பண்பாட்டுத்துறை சார்பில் 'பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய படைப்புகள்' தலைப்பில் மாணவர்கள் பயலிரங்கம், பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகத்தில் நடந்தது.
கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் வரவேற்றார். காலைமாமணி பாரதி, செல்வன், புதுச்சேரி இந்திராகாந்தி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ் துறைத் தலைவர் விவேகானந்தன், மயிலம் பொறியியல் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் சுபாஷினி, பாவலர் ஜெயந்தி ராஜவேலு ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.