ADDED : ஜூலை 08, 2024 04:17 AM
அரியாங்குப்பம்: பொது இடத்தில் போதையில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தவளக்குப்பம், அபிேஷப்பாக்கம் சாலையில், மது போதையில் வாலிபர் ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் ரகளை செய்வதாக தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது.
போலீசார் அங்கு ரகளை செய்த வாலிபரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அவர், தவளக்குப்பம் அடுத்த அபிேஷகப்பாக்கத்தை சேர்ந்த லோகேஷ், 21; என தெரியவந்தது.