ADDED : ஜூலை 08, 2024 04:11 AM
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஆரோவில் ஆரண்ய வனத்திற்கு கல்விச் சுற்றுலா சென்றனர்.
பள்ளி தலைமையாசிரியை புனிதவள்ளி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் கனிமொழி, மகாலட்சுமி, ஜெபிலா ஜீன், சமுதாய நலப்பணித்திட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் மாணவர்களை வழி நடத்தினர்.
இயற்கை செயற்பாட்டாளர் பாலகங்காதரன், மாணவர்களுக்கு, வனத்தின் முக்கியம், வனம் பாதுகாப்பு குறித்து கூறினார். ஆரண்ய வனம் குறித்து ஷரன் பேசினார். இந்த கல்விச்சுற்றுலாவில் மாணவர்கள் ஆரண்ய வனம் குறித்து அறிந்து கொண்டனர்.