Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தவர்களுக்கு செல்வகணபதி நன்றி தெரிவிப்பு

பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தவர்களுக்கு செல்வகணபதி நன்றி தெரிவிப்பு

பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தவர்களுக்கு செல்வகணபதி நன்றி தெரிவிப்பு

பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தவர்களுக்கு செல்வகணபதி நன்றி தெரிவிப்பு

ADDED : ஜூன் 06, 2024 02:27 AM


Google News
புதுச்சேரி: 'புதுச்சேரி மக்கள் பணியிலும், மாநில வளர்ச்சியிலும், பா.ஜ., மக்கள் ஆதரவுடன் தொடர்ந்து பாடுபடும்' என, மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

தற்போது நடந்து முடிந்த, 18வது லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடி மீதும், முதல்வர் ரங்கசாமி மீதும், நம்பிக்கை வைத்து, தே.ஜ., கூட்டணி வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு ஓட்டுகளை அளித்த புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் மக்கள் பணியிலும், மாநிலத்தின் வளர்ச்சி பணியிலும், பா.ஜ., உங்கள் ஆதரவுடன் தொடர்ந்து பாடுபடும் என்பதை நன்றியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

தேர்தல் பணியாற்றிய முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தே.ஜ., கூட்டணி கட்சி தலைவர்கள், பா.ஜ., நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us