ADDED : ஜூன் 20, 2024 03:41 AM
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பழமை வாய்ந்த வேப்மரம் பட்டுப்போய் எந்நேரமும் விழும் நிலையில் இருந்து வந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் கொம்யூன் பஞ்., ஆணையர் ரமேஷிடம் மரத்தை அகற்ற கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஆணையர் ரமேஷ் உத்தரவின் பேரில் ஊழியர்கள் மருத்துவமனை வளாகத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த பட்டுப்போன வேப்பமரத்தை அதிரடியாக அகற்றினர்.