ADDED : ஜூன் 18, 2024 04:49 AM
நெட்டப்பாக்கம்: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கரியமாணிக்கம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு ரூ. 1 லட்சம் வீதம், 5 நபர்களுக்கும், திருமண உதவித் தொகையினை வழங்கினார். நிகழ்ச்சியில், ஆதிதிராவிட நலத்துறை ஆய்வாளர் ஏழுமலை, மணிவண்ணன், சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.