/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிதி ஆணை வழங்கல் வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிதி ஆணை வழங்கல்
வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிதி ஆணை வழங்கல்
வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிதி ஆணை வழங்கல்
வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிதி ஆணை வழங்கல்
ADDED : ஜூன் 28, 2024 06:30 AM

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதி, தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளுக்கு நிதிக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் முதல் தவணையாக 2 பேருக்கு 1.20 லட்சம் வீதம் 2.4 லட்சம் ரூபாய், இரண்டாவது தவணையாக 91 பேருக்கு 1.60 லட்சம் வீதம் 1 கோடியே 45 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய், மூன்றாவது தவணையாக 15 பேருக்கு 17.50 லட்சம் என, மொத்தம்1 கோடியே 65 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான ஆணையை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளர் பாஸ்கர், களப் பணியாளர் மில்கிதாஸ், பா.ஜ., பிரமுகர்கள் ஞானசேகரன், ராமு, கிருஷ்ணமூர்த்தி, சக்திபாலன் கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குனர் சக்திவேல், மாவட்ட துணை தலைவர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.