ADDED : ஜூலை 24, 2024 06:42 AM
அரியாங்குப்பம் : மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அரியாங்குப்பம் ஆர்.கே., நகரை சேர்ந்தவர் வினோத்ராஜ், 29. இவர் தொடர்ந்து மது குடித்து வந்ததால், மனைவி மஞ்சுளா தட்டி கேட்டார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மஞ்சுளா கோபித்துக் கொண்டு, தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.
வினோத்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்கு பதிந்து, மஞ்சுளாவை தேடி வருகின்றனர்.