ADDED : ஜூலை 24, 2024 06:42 AM
புதுச்சேரி : ஆரியப்பாளையம் அருண் நகரைச் சேர்ந்தவர் நந்தினி, 22. இவர் பி.பி.ஏ., முடித்து விட்டு, மேல்படிப்பிற்காக சென்னையில் சித்தி ஆனந்தி விட்டில் தங்கி படித்து வந்தார். கடந்த 16ம் தேதி ஆரியப்பாளையம் வீட்டிற்கு வந்தவர், அன்று மதியம் சென்னைக்கு சென்றார்.
ஆனால் அவர் ஆனந்தி வீட்டிற்கு செல்லவில்லை. மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.