ADDED : ஜூன் 15, 2024 05:26 AM
புதுச்சேரி: மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
குண்டுபாளைத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 29; பெயிண்டர். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை இருந்து வருகிறது.
நேற்று ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த, சதீஷ்குமார், தனது மனைவி வைஷ்ணவியை சரமாரியாக தாக்கினார். காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில், கோரி மேடு போலீசார் வழக்குப் பதிந்து, சதீஷ்குமாரை நேற்று கைது செய்தனர்.