ADDED : ஜூன் 12, 2024 02:18 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு, கவர்னர் ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தி: ரெட்டியார்பாளையம் பகுதியில் கழிவறையில் இருந்து விஷவாயு தாக்கி, செந்தாமரை, காமாட்சி, மாணவி செல்வராணி ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை தருகிறது. 3 பேரின் குடும் பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.