Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருக்காமீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி ஆன்மிக நடைபயணம்

திருக்காமீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி ஆன்மிக நடைபயணம்

திருக்காமீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி ஆன்மிக நடைபயணம்

திருக்காமீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி ஆன்மிக நடைபயணம்

ADDED : ஜூலை 21, 2024 06:08 AM


Google News
Latest Tamil News
வில்லியனுார்: வில்லியனுார் கோகிலாம்பிகை உடணுறை திருக்காமீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை திரளான பக்தர்கள் பங்கேற்ற பவுர்ணமி ஆன்மிக நடைபயணத்தை அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வையாபுரி மணிகண்டன் துவக்கி வைத்தார்.

வில்லியனுாரில் பழமைவாய்ந்த திருக்காமீஸ்வரர் ஆலயம் உள்ளது. அதனை சுற்றி பிரசித்திபெற்ற ஆறு சிவாலயங்கள், 18 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன. பவுர்ணமி நாளில் திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆன்மிக நடைபயணம் செல்கின்றனர்.

அதன்படி நேற்று 30வது மாத ஆன்மிக நடைபயணத்தையொட்டி, மாலை 6:00 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், தொடர்ந்து கோவில் வளாகத்தில் துவங்கிய ஆன்மிக நடைபயணத்தில், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதியை சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் சிவாச்சார்யர்கள் பங்கேற்றனர்.

கோவில் வளாகத்திலிருந்து துவங்கிய நடைபயணத்தை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., வையாபுரி மணிகண்டன் மற்றும் மணி, கராத்தே காதர் மொதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் துவக்கி வைத்தனர். மாட வீதிகளில் வழியாக ராமபரதேசி சித்தர் பீடம், வி.தட்டாஞ்சாவடி தேங்காய் சுவாமி சீத்தர் பீடம், ஒதியம்பட்டு காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் தரிசனம் முடித்து, சங்கராபரணி ஆற்று மேம்பாலம் வழியாக திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் தரிசனத்துடன் உறுவையாறு, கோட்டைமேடு வழியாக மீண்டும் திருக்காமீஸ்வரர் கோவிலை வந்தடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us