ADDED : ஜூலை 18, 2024 11:09 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டை அடுத்த கருவடிகுப்பத்தை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகள் ஜமுனா, 19; இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 16ம் தேதி ஜமுனா வீட்டில் இருந்தார். அவரது தாய் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, ஜமுனாவை காணவில்லை. உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.