ADDED : ஜூன் 17, 2024 12:42 AM

புதுச்சேரி : இந்திரா சிக்னலில் ஆபத்தான நிலையில் சாய்ந்துள்ள சிக்னல் கம்பத்தை அகற்ற வேண்டும்.
புதுச்சேரியில் மின் கம்பங்கள், டிராபிக் சிக்னல் கம்பங்கள், மரக்கிளைகளில் கொத்து கொத்தாக கேபிள்கள் கட்டி வைத்துள்ளனர். சூறை காற்று வீசும் போது மரக்கிளையுடன்கேபிள்களால் இணைத்து கட்டப்பட்டுள்ள மின் கம்பம், டிராபிக் சிக்னல் கம்பங்களும் ஆடி ஆடி அதன் அடிபாகம் சிதைந்து விடுகிறது.
தொடர்ந்து இதுபோல் அடிக்கொண்டே இருப்பதால், கம்பத்தின் அடிபாகம் முழுதும் சேதமாகி சரிந்து விழுகிறது.அப்போது, சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் மீது கம்பம் விழுந்து காயம் ஏற்பட்டு வருகிறது.
இந்திரா சிக்னலில் விழுப்புரம் நோக்கி செல்லும் பாதையில்சிக்னல் கம்பம் சாய்ந்தபடி ஆபத்தான நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும்வாகன ஓட்டிகள் மீது விழும் அபாயம் உள்ளது. விபத்து ஏற்படுவதிற்கு முன், சிக்னல் கம்பத்தை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.